படப்பிடிப்பில் விபத்து! நீருக்கடியில் மூழ்கிய ஜாக்கிசான்: நூலிழையில் உயிர்தப்பியது எப்படி? பகீர் வீடியோ!!

1043

ஜாக்கிசான்….

பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கி சான் சினிமா சூட்டிங்கின் போது வெள்ளத்தில் சிக்கி உயிர் பிழைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாக்கி சான் நடிப்பில் ஆங்கிலத்தில் உருவாகி வரும் படம் வேன்கார்ட். இப்படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா அச்சுறுத்தலால் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஜாக்கி சான் மற்றும் நடிகை மியா முகி இருவரும் காட்டாற்றில் ஜெட்- ஸ்கி வாகனத்தில் பயணிப்பது போன்ற சாகச காட்சி படமாக்கப்பட்டது. அப்பொழுது எதிர்பாராத விதமாக வாகனம் சிறிய பாறையில் மோதி தலைகீழாக கவிழ்ந்துள்ளது.


அதில், ஜாக்கி சானும் மியாவும் தண்ணீரில் மூழ்கினர். அதனை தொடர்ந்து விழுந்த சில நொடிகளில் மியா முகி தண்ணீரிலிருந்து வெளியே வந்தார்.

ஆனால், ஜாக்கி சானை எங்கும் காணவில்லை. அதனைத் தொடர்ந்து பதறிப்போன பாதுகாவலர்கள் தண்ணீரில் குதித்து ஜாக்கிசானை தேடிய நிலையில் 45 வினாடிகளுக்கு பிறகு பாறையின் அடியில் சிக்கிக்கொண்ட அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

இந்த காட்சிகள் அனைத்தும் தற்செயலாக ஓடிக் கொண்டு இருந்த கேமராவில் படமானது. விபத்தினை அடுத்து படப்பிடிப்பினை தள்ளி வைக்க தயாரிப்பாளர்கள் கேட்ட போதிலும், சிறிது ஓய்வுக்கு பின் ஜாக்கி ஜான் மீண்டும் அதே காட்சியில் நடித்து அசத்தியுள்ளார். இதுகுறித்து ஜாக்கிசான் தெரிவிக்கையில், “அது சாதாரணமான ஒரு காட்சி தான். ஆனால், கிட்டத்தட்ட நீரில் முழுவதுமாக மூழ்கி விட்டேன்.

ஸ்கூட்டர் கவிழ்ந்ததால் நீருக்கு அடியில் சிக்கிக் கொண்டேன். என்ன நடந்தது என்று கூட நினைவில்லை. ஏதோ ஒரு சக்தி ஒன்று என்னைக் காப்பாற்றியதாக உணர்ந்தேன். முழு மூச்சில் ஸ்கூட்டரைத் தள்ளியதால் என்னால் வெளிவர முடிந்தது” எனக் கூறினார்.

மேலும், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.