பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு 42 வயதில் மறுமணமா? உண்மையை உடைத்த ரேஷ்மா பசுபுலேட்டி!!

241

ரேஷ்மா..

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் . விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார்.

அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார். சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே.


மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், நடிகை ரேஷ்மா சமீபத்தில் பிரபலத்துடன் Bridal Photoshoot நடத்தினார். அந்த புகைப்படங்கள் வெளியாக விரைவில் மறுமணம் செய்கிறாரா என கமெண்ட் செய்ய ஆரம்பித்தார்கள் என்றும்,

இதுகுறித்து ரேஷ்மா, தான் 3 விஷயங்கள் குறித்து பேசுகிறேன் என்றும், Bridal Magazineனுக்காக தான் அந்த போட்டோ ஷுட் நடத்தினேன் என்றும், அதுவும் 1 வருடத்திற்கு முன் எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். 3.33 படத்தை ஆஹா தமிழில் காணுங்கள், தனது அடுத்த படமான சத்ய சோதனை வரும் ஜுலை 21ம் தேதி வெளியாக இருக்கிறது என பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)