பாடசாலை மாணவியை ஏமாற்றி யுவதி செய்த மோசமான செயல்; வெளியான பகீர் தகவல்!

354

மாணவி……

சகோதரியான பாடசாலை மாணவியை அழைத்து சென்று காதலி , தனது காதலனிற்கு விருந்து வைத்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கொச்சிக்கடை, கட்டான பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 20 வயதான இளைஞனும், 17 வயதான யுவதியுமே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சில வாரங்களின் முன்னர், மாணவியின் தாயார் உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில், மாணவி, தனது ஒன்றுவிட்ட சகோதரியின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இதன்போது, உறவினர் ஒருவரின் வீட்டிற்கு செல்வதாக கூறி, மாணவியை அழைத்துச் சென்ற யுவதி, தனது காதலனின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இளைஞன் மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நிலையில் காதலியும், அதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.


அத்துடன் வீடு திரும்பும் போது, நடந்ததை யாரிடமும் கூற வேண்டாம் என மாணவியிடம் சகோதரி கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், கடந்த வாரம் தனது தாயார் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியதும், நடந்த சம்பவத்தை தாயாரிடம் மாணவி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் மாணவியின் தாயார் முறைப்பாடு பதிவு செய்ததன் அடிப்படையில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காதலனின் வற்புறுத்தலின் பேரிலேயே அவ்வாறு தான் செய்ததாக காதலி வாக்குமூலமளித்துள்ள நிலையில், கைதான இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.