பிரபல கிரிக்கெட் வீரர் பாலியல் தொல்லை தந்தார்… பொய் புகார் கொடுத்து போலீசில் சிக்கிய பிரபல நடிகை!!

741

பிரித்வி ஷா..

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா. இவர் பிப்ரவரி 15ம் தேதி இரவு மும்பையில் உள்ள சாண்டகிரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வெளியே வந்தார். அதே விடுதிக்கு வந்திருந்த இன்ஸ்டாகிராம் பிரபலமும், போஜ்புரி நடிகையுமான ஸ்வப்னா கில் ஒரு செஃல்பி புகைப்படம் எடுக்க வேண்டுமென பிரித்வியிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஸ்வப்னா கில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரித்விஷாவின் காரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். ஸ்வப்னா கில் மற்றும் அவரது நண்பர் பிரித்விஷாவின் கார் கண்ணாடியை அடித்து உடைத்து விட்டனர். அத்துடன் பிரித்விஷாவையும் கடுமையாக தாக்கினார். இச்சம்பவம் குறித்து பிரித்வி ஷா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஸ்வப்னா கில் மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர். சிறையில் இருந்து விடுதலை செய்யபட்ட ஸ்வப்னா கில் கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மீது பாலியல் புகார் அளித்தார்.


அப்போது கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா குடிபோதையில் இருந்ததாகவும், தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும் ஸ்வப்னா கில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாரை காவல்துறை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனையடுத்து ஸ்வப்னா கில் அந்தேரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இன்று இந்த மனு கோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என நடிகை ஸ்வப்னா கில் அளித்துள்ள புகார் பொய்யானது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மேலும் சிசிடிவியில் பதிவான காட்சிகளின் படி ஸ்வப்னா கில் மற்றும் அவரது நண்பர் சோபித் தாக்கூர் கேளிக்கை விடுதியில் மதுகுடித்துவிட்டு நடனமாடினர்.

சோபித் தாக்கூர் தனது செல்போனில் பிரித்விஷாவை வீடியோ எடுக்கத் தொடங்கினார். வீடியோ எடுக்க வேண்டாம் என பிரித்விஷா தடுத்துள்ளார், வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் பிரித்விஷாவும் அவரது நண்பரும் ஸ்வப்னா கில்லை பாலியல் துன்புறுத்தல் செய்த மாதிரியான நிகழ்வுகள் எதுவுமே நடைபெறவில்லை. இது குறித்து கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்வப்னா கில்லை யாரும் தவறாக தொடவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

ஸ்வப்னா கில் தனது கையில் பேஸ்பால் மட்டையுடன் பிரித்விஷா காரை துரத்துகிறார். அதன் பிறகு கிரிக்கெட் வீரரின் கார் கண்ணாடியை ஸ்வப்னா கில் உடைத்துள்ளார். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அப்பகுதியில் மோதல் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது.

அங்கு ஸ்வப்னாகில் கையில் பேஸ்பால் மட்டையுடன் இருந்ததையும், போலீசார் வருவதை பார்த்த உடன் அந்த பெண்ணின் நண்பன் அவரிடமிருந்த பேஸ்பால் மட்டையை மறைவான இடத்தில் வீசியதையும் காவல்துறையினர் கண்காணித்துள்ளனர். மேலும் அவர் மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை’ என மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் மூலம் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக பிரித்வி ஷா மீது நடிகை ஸ்வப்னா கில் அளித்த புகார் போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வப்னா கில்லின் நண்பர் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோவை கோர்ட்டில் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கும்படி கில் தரப்பு வழக்கறிஞர் கோர்ட்டில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், கேளிக்கை விடுதிக்கு வெளியே நடந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை கொடுக்கும்படி கில் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்த ஒட்டுமொத்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.