பிரிந்துசென்ற மனைவியை அழைக்கச் சென்ற கணவன்.. மாமனார் வீட்டில் நடந்த விபரீதம்!!

289

தேனியில்..

தேனி கண்ணாத்தாள் தெரு பகுதியில் கந்தன்ராஜன்(34)- சூர்யகலா தம்பதி வசித்து வருகின்றனர். இருவரும் காதலித்து 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டனர்.

கந்தன்ராஜன்- சூர்யகலா தம்பதிக்கு இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில், கந்தன் ராஜனுக்கும், அவரது மனைவி சூர்யகலாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு மோதலாக முற்றியதாகவும், இதில் சூர்யகலாவை கணவர் தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால் சூர்யகலா தன் இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.


சில நாட்களுக்கு பிறகு கந்தன் ராஜன், தனது மனைவி பெற்றோர் இல்லத்திற்குப் சென்று சமாதானம் பேசினார். அப்போது இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பும் ஆனது.

மேலும் கந்தன் ராஜனை, அவரது மனைவி சூர்யகலாவின் தந்தை கனகராஜன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் தாக்கி அவரது செல்போன், நகை மற்றும் அவரிடம் இருந்த 2 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டனர்.

இதனால் கந்தன் ராஜன் பெரும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து கந்தன்ராஜன் கொடுத்தப் புகாரின் பேரில், தேனி போலீசார் கனகராஜன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை பார்க்கப் போன இடத்தில் நகை, பணத்தையும் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.