புருஷனோட வாழவிடுங்க … 35 நாட்களாக கணவர் வீட்டு முன் தர்ணா.. கதறும் மனைவி!!

7855

சேலத்தில்..

சேலம் மாவட்டம் ஓமலூர் வேலகவுண்டனூரில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மகள் பவித்ரா அதே பகுதியில் வசித்து வரும் மோகனை 10 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

5 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்தனர்.இந்நிலையில் மோகனின் சகோதரிக்கு குழந்தை பிறந்ததால் அதைக் காண சொந்த ஊருக்கு மோகன் வந்துள்ளார்.

ஆனால் அதற்குப் பிறகு அவர் சென்னைக்கு திரும்பி வரவே இல்லை. மனைவியுடன் பேசவும் இல்லை. எந்த தகவலும் இல்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த பவித்ரா வேலகவுண்டனுாரில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்த நிலையில் கணவரின் பெற்றோரான முருகன், சாரதா மற்றும் உறவினர்கள் அவரை பார்க்க அனுமதிக்கவில்லை.


பவித்ரா ஜூலை 24ல் சேலம் எஸ்.பி. அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.இந்தபுகாரின் அடிப்படையில் கணவர், மாமனார், மாமியார் உள்பட 7 பேர் மீது மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பவித்ரா, வேலகவுண்டனுாரில் உள்ள கணவர் வீடு முன் உறவினர்களுடன், தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

35வது நாளாக இன்று தர்ணா போராட்டம் நடந்து வரும் நிலையில் பவித்ரா இது குறித்து ” ஆகஸ்ட் 23 முதல் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறேன். இடையில், 2 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு சென்றேன்.

கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். அதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தாலே போதும். அதுவரை போராட்டம் தொடரும்” எனக் கூறியுள்ளார்.