பொறியியல் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.. கதறித் துடித்த தந்தை!!

7712

திருவள்ளூரில்..

திருவள்ளூர் மாவட்டம் ஆஞ்சநேயபுரத்தில் வசித்து வருபவர் மூர்த்தி . இவரது மகள் ஆஷா. இவர் இவர் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் இரவு 11 மணி வரை படித்துவிட்டு அதன் பின்னர் தூங்க செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

வழக்கம் போல் 11 மணி வரை படித்துவிட்டு அறையில் உள் தாழ்ப்பாள் போட்டு கொண்டு படுத்து கொண்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை 6.30 மணி ஆகியும் எழுந்து வெளியில் வரவில்லை.

நேரமாகிவிட்டது என அவரது தந்தை மூர்த்தி கதவை தட்டியபோது கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த மூர்த்தி ஜன்னல் வழியாக பார்த்தபோது ஆஷா மின் விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.