மகன் உயிரிழந்த அதே நாளில் மகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

202

விருதுநகரில்..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் சாலமுத்து – பாண்டி தேவி தம்பதியினர். இவர்களுக்கு மகாராஜன், புவனேஸ்வரி என்ற இரு பிள்ளைகள் இருந்தனர்.

மகாராஜன் மனநலம் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியாக இருந்ததால் தம்பதியினர் மிகுந்த மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிதேவியின் கணவர் சாலமுத்து உயிரிழந்தார்.

இதனால் பாண்டிதேவி மாற்றுத்திறனாளி மகனையும், பள்ளிப் படிப்பில் ஈடுபட்டு வரக்கூடிய மகளையும் காப்பாற்ற வழி தெரியாமல் மிகுந்த சிரமப்பட்ட நிலையில் அரசு மூலம் உதவி கோரியுள்ளார்.


தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போது விருதுநகரில் நடைபெற்ற நமது தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி மகனுடன் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் உறுதி அளித்திருந்தார். தொடர்ந்து திமுக சார்பாக 5 லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கப்பட்டது.

சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தவுடன் சித்துராஜபுரம் பகுதியில் அங்கன்வாடி ஆசிரியராக பாண்டிதேவி பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில், கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளி மகன் இதே நாளில் உயிரிழந்துள்ளார்.

தொடர்ந்து கணவன் மற்றும் மகன் இறந்த நிலையில் பாண்டிதேவி மிகுந்த மனவேதனையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது மகன் இறந்த நாளான இன்று தாய் பாண்டிதேவி, விக்னேஸ்வரி இருவரும் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி கொண்டுள்ளனர்.

நீண்ட நேரம் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து சிவகாசி நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகன் இறந்த அதே நாளில் தாய் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.