மசூதிக்கு மந்திரிக்க வந்த மனைவியுடன் காதல்! கழுத்தை அறுத்து வீசிய கணவன்: பயங்கர சம்பவத்தின் முழு பின்னணி!!

355

தமிழகத்தில் குழந்தைக்கு மந்திரிக்க வந்த பெண்ணுடன், திருமணமான பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட அது இறுதியில் கொலையில் முடிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் பெரியபட்டு ஏரியில் கடந்த 14-ஆம் திகதி சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தெரிவித்தனர்.

இதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நபரின் உடல்களில் காயங்களும், கழுத்தில் ஆழமான வெட்டுக்காயமும் இருந்ததால், இந்த சம்பவம் குறித்து உண்மையை கண்டறிய 5 பேர் கொண்ட ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த சமயத்தில்தான், பண்ருட்டி அருகே உள்ள எல்.என் புரம் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் காணாமல் போனதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.


அவர் சொன்ன அடையாளங்களும், இறந்த கிடந்த நபரின் அடையாளங்களும் ஒன்றாக ஒத்து போனது. அதன் பின் நடந்த விசாரணையில், அவரின் பெயர் சதாம் உசேன் என்பதும், அவர் எல்.என் புரம் பள்ளிவாசலில் ஹஜ்ரத் தாக இருந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

அவரது செல்போன் எண்களை வைத்து பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, அன்சாரி என்ற நபர் பொலிசாரிடம் சிக்கினார். அன்சாரி சொன்ன ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டு பொலிசார் மிரண்டு போய்விட்டனர். பீகாரை சேர்ந்த அன்சாரி, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் வந்து வேலை பார்த்து வந்துள்ளார்.

இவருக்கும் திருமணம் ஆகி குழந்தையும் உள்ளது. இந்த குழந்தைக்குதான் திடீரென உடம்பு சரியில்லாமல் போக, அப்போது மசூதியில் மந்திரிப்பதற்காக குழந்தையை அன்சாரி மனைவி தூக்கி சென்றுள்ளார்.

அங்கு சதாம் உசேன் என்பவரின் நட்பு அன்சாரி மனைவிக்கு கிடைத்துள்ளது. இவர்களின் நட்பு காலப்போக்கில் நெருங்கி பழகும் அளவிற்கு திருமணத்தை மீறிய முறையற்ற உறவாக மாறியுள்ளது. சுமார் 5 வருடங்களாக இப்படி இருக்க, இந்த விஷயம் தெரிந்த அன்சாரி மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அவர் கணவரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து காதலனிடம் பேசுவதும், கொஞ்சுவதுமாக இருந்துள்ளார். இதனால் அன்சாரி, காதலனான சதாம் உசேனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். அதன் படி அவரை ஒருவாரமாகவே கொலை செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

ஆனால், அது எதுவும் பலன் கொடுக்காததால், நேரடியாக சதாம் எண்ணிற்கு போன் செய்து, எலவனாசூர் கோட்டையில் உள்ள ஒருவருக்கு மந்திரிக்க வேண்டும் என்று கூறி அவரை இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார். அப்போது, திருநாவலூர் பெரியபட்டு ஏரி அருகே வந்த போது சதா முசேனை வண்டியை விட்டு கிழே இறங்க சொல்லி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு, அங்கிருக்கும் ஏரியில் வீசியுள்ளார்.

இந்த சம்பவத்தில் அன்சாரிக்கு 3 பேர் உதவியுள்ளனர், அதன் அடி அஷ்ரப் அலி, சிறுவன் உள்ளிட்ட 3 பேரை பொலிசார் கைது செய்து ஒருவரை தேடி வருகின்றனர்.