மனைவியை நிர்வாணமாக்கி தெருவில் ஊர்வலம்.. கணவன் செய்த கொடூரம்!!

561

ராஜஸ்தானில்..

ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண்ணுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் பக்கத்து வீட்டு ஆணுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும்,

கணவர் வீட்டை விட்டு வெளியேறி அந்த நபருடன் இளம்பெண் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரை அங்கிருந்து கடத்தி கிராமத்திற்கு கொண்டு வந்தனர்.

அங்கு ஊர் மக்கள் முன்னிலையில் இளம்பெண் மீது கணவர் கடுமையான தாக்குதல் நடத்தினார். அதன்பிறகு கட்டாயப்படுத்தி ஆடைகளை அவிழ்த்தார். இளம்பெண் வேண்டாம், வேண்டாம் எனக் கூறி கதறி அழுதும் மனமிறங்காமல் துன்புறுத்தி ஆடையை அவிழ்த்த நபர், கொடூரமாக அடித்து ரோட்டில் இழுத்துச் செல்கிறார்.

அருகில் இருந்தவர்கள் யாரும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோக எடுத்து பதிவிட, அது வைரலாகி ராஜஸ்தான் மாநிலத்தின் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.


இதுதொடர்பாக கணவர் உள்பட 3 பேரை காவல் துறை கைது செய்து விசாரித்து வருவதாகவும், மற்றவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் காவல் துறையினர் கூறியுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்களை பிடிக்கும் போது அவர் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பிரதாப்கர் மாவட்ட எஸ்.பி சம்பவம் நடந்த கிராமத்திற்கு நேரில் சென்று விசாரித்ததோடு, குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய 6 தனிப்படைகளையும் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே சிந்தியா, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது என காங்கிரஸ் அரசை கடுமையாக சாடினார். அந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “நாகரிகமான சமுதாயத்தில் இந்த கொடூர செயலை செய்த நபர்களுக்கு இடம் கிடையாது. குற்றவாளிகள் விரைவில் சிறையில் அடைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்” என்று உறுதியளித்துள்ளார்.