மனைவி விவகாரம்.. தந்தையை கொலை செய்த அரசு பள்ளி ஆசிரியர்!!

92

தமிழகத்தில்..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் தசரதன் (55). இவரது மகனான அஸ்வத் குமார் (30) என்பவரும், அருணா என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில், அஸ்வத் குமார் பசுவந்தனையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், தற்போது இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக ஓராண்டு காலமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், மாமியார் வீட்டில் உள்ள தனது இரண்டு மகள்களையும் பார்ப்பதற்கு அஸ்வத் குமார் சென்றார். அப்போது அவர் தனது மனைவி வீட்டிற்கு வருமால் இருக்க மாமனார் தான் காரணம் எனக் கூறி, கையில் அரிவாளுடன் கோபத்துடன் கிளம்பினார்.

உடனே, இதுபற்றி தனது மருமகளிடம் அஸ்வத் குமார் தந்தை தகவல் தெரிவித்துள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட அருணா வீட்டை பூட்டி வைத்துள்ளார். அப்போது, மகன் பின்னாடியே தந்தை தசரதன் , அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு செல்லலாம் எனக் கூறியுள்ளார். அதற்குள் ஆவேசமான அஸ்வத் குமார், இதற்கு காரணம் நீங்கள் தான் எனக் கூறி அரிவாளால் சரமாரியாக தந்தையை வெட்டியுள்ளார்.


இதனால் சம்பவ இடத்திலேயே தசரதன் உயிரிழந்தார். இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், அவர்கள் விரைந்து வந்தனர். உடனடியாக , உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு பொலிஸார் அனுப்பி வைத்தனர். மேலும், இதற்கு காரணமான அஸ்வத் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.