மாப்பிள்ளைக்கு நலங்கு வைக்க வந்த நபர்….. சிரித்த மாதிரியே பிரிந்த உயிர் : சோகத்தை ஆழ்த்திய சம்பவம்!!

664

தெலுங்கானா..

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண விழாவின் போது இந்த துயர சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது. அந்த வீடியோவில் மணமகனுக்கு உறவினர்கள் அனைவரும் மஞ்சள் பூசுகின்றனர்.

திருமண சடங்கின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த வைபவத்தில் குடும்பத்தினர் கலந்துகொண்டதாக தெரிகிறது. அப்போது உறவினர் ஒருவர் மணமகனுக்கு மஞ்சள் பூச வருகிறார்.

மணமகனுக்கு அருகே அவர் அமர்ந்து மஞ்சள் பூசும்போதே திடீரென அவர் சரிந்து கீழே விழுந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை எழுப்பி பார்த்திருக்கின்றனர்.


ஆனாலும் பலன் இல்லாததால் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியிருக்கின்றனர்.

இதனால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இதனிடையே உயிரிழந்தவர் பெயர் ரப்பானி எனவும், அவர் குல்சார் ஹவுசில் உள்ள நகைக்கடை வேலை பார்த்து வந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் ரப்பானி திருமண நிகழ்ச்சியின்போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.