மாமனாரின் பாலியல் தொல்லையைத் தடுக்காத கணவர்.. குழந்தையுடன் இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு!!

6510

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி மாவட்டம் பேச்சம்பள்ளி அடுத்த ஜிங்கள்கதிரம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் 28 வயதான விக்னேஸ்வரி. 32 வயதான இவரது கணவர் விவசாயம் செய்து வருகிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமணமாகி தற்போது நான்கு வயதில் நிதர்சனா என்ற மகள் உள்ளார்.

விக்னேஸ்வரியின் மாமனார் பெருமாள் கடந்த சில மாதங்கள் ஆகும் அவருக்கு பாலியல் ரீதியான தொல்லைகளை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.  இதுகுறித்து விக்னேஸ்வரி தனது கணவரிடம் பலமுறை தெரிவித்துள்ளார்.

இதனை அவர் கண்டு கொள்ளாமல் இருந்த காரணத்தினால் குடும்பத்தில் அடிக்கடி சிக்கல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் திடீரென்று நேற்று முன்தினம் விக்னேஸ்வரியை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு அவரது கணவர் திருப்பதி வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றுள்ளார்.


இதுகுறித்து விக்னேஸ்வரி போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இது குறித்து ஊர்த் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை.

இந்நிலையில் தனது வீட்டின் முன்பே தனது மகளோடு நிதர்சனா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று மாலை 3 மணியிலிருந்து தொடர்ந்து பூட்டிய வீட்டில் இருந்து தர்ணா போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக நிதர்சனாவின் மாமனார், மாமியார், கணவர் ஆக்கிய மூன்று பேரும் வீட்டைப் பூட்டிவிட்டு,

அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கொட்டகையில் குடியிருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது உரிமைக்காகப் பெண் ஒருவர் தனது 4 வயதுக் குழந்தையுடன் தனது கணவரின் வீட்டின் முன்பு போராடி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.