மாமனாருடன் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு ஓடிய மருமகள்.. கணவன் அளித்த வித்தியாசமான புகார்!!

2860

ராஜஸ்தானில்..

திருமணத்திற்கு புறம்பான உறவுகள் பற்றிய செய்திகள் நாள்தோறும் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால் ராஜஸ்தானில் உள்ள ஒரு குக்கிராமத்தில் நடந்த சம்பவம் பலரையும் உலுக்கியுள்ளது. மாமனாரே அவரது மருமகளுடன் காதல் வயப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் சிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் பைராகி. இவரது மகன் பவன் பைராகிக்கு திருமணமாகி 6 மாத கைக் குழந்தையும் உள்ளது. பவன் பைராகி வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால், அவரது வீட்டில் அவரின் மனைவியும், தந்தையும் தனியாக இருக்கும் சூழலே ஏற்பட்டது.


இதன் காரணமாக இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர். இதையடுத்து சில மாதங்களுக்கு முன் ரமேஷ் பைராகி தனது மருமகளுடன் கண்காணாத இடத்திற்கு சென்றுவிட்டார்.

இதையறிந்த மகன் பவன், காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அவரது புகார் மிகவும் வித்தியாசமாக பார்க்கப்படுகிறது. அவரின் புகாரில், தன்னுடைய மனைவி நேர்மையானவர் என்றும், தன் மனைவியின் எளிமையான குணத்தை பயன்படுத்தி,

தன் தந்தை, மனைவியை ஏமாற்றி அழைத்து சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது தந்தை மனைவியிடம் தவறாக நடக்க முயற்சித்தார் எனவும், தன் மனைவியை மிரட்டி தனது பைக்குடன் சென்றுவிட்டார் எனவும் கூறியுள்ளார்.