அனுபமா பரமேஸ்வரன்..

கேரளாவை சேர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் சில மலையாள படங்களில் நடித்துவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். தாய்மொழி மலையாளம் என்றாலும் இவர் அதிகமாக நடித்தது தெலுங்கு மொழி படங்களில்தான்.

தெலுங்கில் இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு பல படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் அறிமுகமானார். அதன்பின் அதர்வாவுடன் ஒரு படத்தில் நடித்தார். என்ன காரணம் என்ன தெரியவில்லை. தமிழில் அதிக படங்களில் அனுபமா நடிக்கவில்லை.

அனுபமா நடிப்பில் வெளியாகும் தெலுங்கு படங்கள் ஒடிவிடுவதால் இவருக்கு அங்கு மார்க்கெட் இருக்கிறது. இப்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் சைரன் எனும் படத்தில் நடித்து வருகிறார். நடிப்பிற்காக சில விருதுகளையும் பெற்றுள்ளார். ஒருபக்கம் விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.

சில சமயம் சற்று எல்லை மீறி கவர்ச்சி காட்டவும் துவங்கினார். இந்நிலையில், ஜாக்கெட்டை போல் ஒன்றை அணிந்து ஒப்புக்கு புடவை கட்டி உடலை வளைத்து வளைத்து காட்டி போஸ் கொடுத்து அனுபமா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
















