மிரட்டிய உறவினர்கள்… எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி!!

149

காஞ்சிபுரத்தில்..

காஞ்சிபுரம் மானாமதி கண்டிகை பகுதியில் வசித்து வருபவர் ராஜ். இவருடைய மகன் 25 வயது ஹரிஷ். இவர் ஒரகடம் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த பாலையூரில் வசித்து வரும் ஆர்த்தியும் பணிபுரிந்து வந்தார். இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் உறவினர்களுக்கு தெரிந்ததால் ஆர்த்திக்கு உடனடியாக திருமண ஏற்பாடு செய்தனர்.

இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய ஆர்த்தி, அச்சரப்பாக்கத்தில் அக்டோபர் 1ம் தேதி கிறிஸ்தவ முறைப்படி ஹரிஷை திருமணம் செய்து கொண்டார்.

இதன் பிறகு மானாமதி கணவர் வீட்டில் தங்கியிருந்தார். ஆர்த்தியை தேடிக் கொண்டிருந்த உறவினர்கள் ஹரிஷ் வீட்டுக்கு உருட்டுக்கட்டைகளுடன் சென்று மிரட்டல் விடுத்தனர்.


பயந்துபோன ஹரிஷ் – ஆர்த்தி தம்பதியினர் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து தஞ்சம் அடைந்தனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவும் அளித்துள்ளனர். ஆர்த்தி அளித்துள்ள மனுவில்,

‘எனது குடும்பத்தினர் பணபலம், படைபலத்தால் எனது கணவர் குடும்பத்தை மிரட்டி வருகிறார்கள். அவர்களிடமிருந்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என ஆர்த்தி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட காவல்துறை அவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.