மெட்ரோ ரயிலுக்குள் முத்தமழை.. தொடரும் ஆபாசங்கள்: அதிர்ச்சி வீடியோ!!

293

இந்தியாவில்..

இந்தியாவின் வட மாநிலங்களில் குற்றவியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மெட்ரோ ரயிலில் சமீபகாலமாக விரும்பத்தகாத செயல்கள், சக பயணிகளை கூசச் செய்யும் செயல்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த மாதிரியான சில சம்பவங்களால் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பொது இடம் என்று கூட பாராமல் சில பயணிகள் அத்துமீறி பாலியல் சேட்டையில் ஈடுபடுவது, பெண்கள் படுகவர்ச்சிகரமாக உடை அணிவது என ஏற்கனவே பல வீடியோக்கள் வெளியாகின.

கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி மெட்ரோவில் இளைஞர் ஒருவர் ஆபாச செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வீடியோ வைரலானது. இச்சம்பவம் குறித்து டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

டெல்லி மெட்ரோவில் இருக்கையில் அமர்ந்து அந்த நபர் ஆபாசமான செயலில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் (டிஎம்ஆர்சி) மெட்ரோவில் பயணிக்கும்போது


பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டது. அத்துடன் அருவறுக்கும் செயல்கள் ஏதாகினும் நடந்தால் உடனடியாக சக பயணிகளள் “உடனடியாக நடைபாதை, நிலையம், நேரம் போன்ற விவரங்களைக் கொடுத்து இந்த விஷயத்தை ஹெல்ப்லைனுக்கு தெரிவிக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது டெல்லி மெட்ரோ ரெயிலில் ஒரு இளம் ஜோடி முத்த மழை பொழிவது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், மெட்ரோ ரயிலுக்குள் இளைஞர் ஒருவர் தரையில் அமர்ந்துள்ளார். அவரின் மடியில் ஒரு இளம் பெண் மடியில் படுத்துக் கொண்டு இருக்கிறார். இளம்பெண்ணை அந்த இளைஞர் முத்தமிட்டு கொண்டே இருக்கிறார்.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் , ரயிலில் பயணம் செய்பவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து பல்வேறு விதமான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த ஜோடி மீது மெட்ரோ ரெயில் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகமும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்யும் போது சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சமூகத்தில் ஏற்றுக்கொள்ள கூடிய அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தும் அநாகரீகமான அல்லது ஆபாச செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியிட்டுள்ளது.