மேக்கப்பால் தாயை அடையாளம் காணாது கதறி அழும் சிறுவன் : வைரலாகும் காணொளி!!

635

மேக்கப்…..

தாயை அடையாளம் காண முடியாமல் மகன் அழுகின்ற காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தாயொருவர் மேக்கப் போட்டுக்கொண்டு தனது மகனிடம் வந்தபோதே இவ்வாறு அடையாளம் காணமுடியாமல் மகன் அழுகின்ற சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த காணொளியில் தன் அம்மா பியூட்டி பார்லருக்குச் சென்று அங்கு மேக்கப் போட்டுக் கொண்டு வந்தபோது அவரைப் பார்த்த மகன் அவரை அடையாளம் காண முடியாமல் கதறி கதறி அழுகின்றார்.


உடனே அவரது தாய் நான் தான் உன் அம்மா என்று கூறும் நிலையில் சிறுவனை ஆறுதல் செய்ய முயன்றாலும், தன் தாயைக் காணவில்லை என்று சிறுவன் கதறி அழுது கண்ணீர் சிந்துகின்றார்.

ஒப்பனை கலை என்பது பல அதிசயங்களைச் செய்யும், அது ஒருவரின் தோற்றத்தை முற்றிலும் மாற்றும் . இந்த ஒப்பனையால் தாயை அடையாளம் காண முடியாமல் போய்விட்டது. இந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.