வலிக்குதும்மா என துடித்த சிறுமி.. காரணம் கேட்டு அதிர்ந்த தாய்.. தாய்மாமனின் கேடுகெட்ட செயல்!!

8698

கடலூர்..

கடலூர் மாவட்டம் சிதம்பரம் முத்துமாணிக்கம் நாடார் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீ பிரியா. இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கணவனை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்தார்.

இன்று வரை தனது 5 வயது பெண் குழந்தையுடன் இங்கு வசித்து வருகிறார். ஸ்ரீ பிரியாவின் அண்ணன் மகேஷ் ராவ் (40). இவர் பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார் இன்னும் கல்யாணமாகவில்லை.

இவரும் தாய் வீட்டில்தான் வசித்து வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த மகேஷ் தங்கையின் மகளான 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து குழந்தைக்கு பிறப்புறுப்பில் வலி உண்டாகி அழுதுகொண்டிருந்தது.


இதை கண்ட தாய் ஸ்ரீபிரியா அதுகுறித்து விசாரித்ததில் சிறுமி அனைத்தையும் கூறியுள்ளது. அதை கேட்டு அதிர்ந்துபோன ஸ்ரீபிரியா மகேஷ் மீது சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் அவர் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும், சிறுமிக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

திருமணம் ஆகி கணவனை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்த தங்கையின் பெண் குழந்தையை திருமணமாகாத அண்ணன் குடித்துவிட்டு வந்து பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு குழந்தைக்கு பாதுகாப்பாளராக இருப்பவர் அல்லது குழந்தைக்கு பாதுகாப்பு கொடுக்கக்கூடிய இடத்தில் இருப்பவர்களே அக்குழந்தையை வன்கொடுமை செய்தால் போக்சோ பிரிவு 5ன் படி நீதிமன்றம் தண்டனை கொடுக்கும். இதனால் குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 10 வருடம், அதிகபட்சம் ஆயுள்தண்டனை வரையிலும் கொடுக்கலாம்.