விடுமுறை நாளில் பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம் : கதறும் குடும்பம்!!

2390

சென்னை….

சென்னை அயனாவரம் கே.கே நகரில் வசித்து வருபவர் குமார். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் லோகேஸ்வரன். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வருகிறார். நேற்று பள்ளி விடுமுறை தினம் என்பதால் லோகேஸ்வரன், ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியில் உள்ள நண்பரின் உறவினர் வீட்டுக்கு வந்தார்.

பின்னர் மாலையில் லோகேஸ்வரன் தனது நண்பர்களுடன் ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் குளிக்கச் சென்றார். அப்போது லோகேஸ்வரன் கால்வாய் பாலத்தில் இருந்து தண்ணீரில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தான்.

கால்வாயில் தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருந்ததால் லோகேஸ்வரன் நீரில் அடித்து செல்லப்பட்டார்.


இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் மாயமான மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறை தினத்தில் குளிக்க சென்ற மாணவர் உயிரிழந்தது அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.