கேரளா….

கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள அங்கமாலி பகுதியில் லிஜி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டார். மகேஷ் என்ற நபர் மருத்துவமனைக்குள் புகுந்து லிஜியை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார் என்பது பின்னர் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் மகேஷை கைது செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில்,

பள்ளிப்பருவம் முதல் லிஜி தன்னுடன் பழகி வந்துள்ளார் என்றும், வேறொருவரை திருமணம் செய்துகொண்டு தன்னுடன் பேசுவதை அவர் தவிர்த்துள்ளார் என்றும் மகேஷ் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் மருத்துவமனைக்குள் புகுந்து லிஜியை கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது தப்பியோடிய அவரை துரத்திப்பிடித்து 12 முறை கத்தியால் குத்தி மகேஷ் கொடூரமாக கொலை செய்துள்ளார் என்பதை தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மகேஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் கொலை வழக்கில் மகேஷின் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.















