வேறொரு பெண்ணை முடிவு செய்த பெற்றோர் : காதலில் இருந்த காவலர் எடுத்த விபரீத முடிவு!!

2749

விருதுநகர்….

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்தவர் வைரமுத்து (25). தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த இவர், ஈரோட்டைச் சேர்ந்த பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார்.

ஆனால் இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் அவர் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் வைரமுத்துவின் பெற்றோர் வேறொரு பெண்ணை பார்த்து நிச்சயதார்த்தம் செய்யவும் முடிவு செய்துவிட்டனர்.

அதன் பின்னர் தான் வைரமுத்து தனது காதல் விவகாரம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். தாமதமாக கூறியதால் வைரமுத்துவை அவர்கள் திட்டியதாக கூறப்படுகிறது.


இதன் காரணமாக இரண்டு நாட்களாக மனஉளைச்சலில் இருந்த அவர் வேலைக்கும் செல்லவில்லை. இந்த நிலையில் பெற்றோர் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, வைரமுத்து படுக்கை அறைக்கு சென்று தூக்கில் தொங்கியுள்ளார்.

இதனை லட்சுமி என்பவர் பார்த்து குடும்பத்தினரிடம் கூற, அனைவரும் அலறியடித்து ஓடிவந்து வைரமுத்துவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே வைரமுத்து இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், வைரமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.