ஹேம்நாத்தின் அறையில் அவ்வளவு ஆணுறை… சித்ரா அறைக்கு வந்த விஐபி யார்? வெளியான திடுக்கிடும் தகவல்!!

31948

சித்ரா…

சின்னத்திரை நடிகை விஜே சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி நள்ளிரவில் நசரத்பேட்டை நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த வழக்கில் கைதான சித்ராவின் காதல் கணவர் 60 நாட்கள் சிறையிலிருந்து பின்னர் ஜாமினில் விடுதலையானார். அப்போது அதிமுக அமைச்சரின் மகன், தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரின் வாரிசு மற்றும் சுத்தமான அமைச்சர் ஆகிய மூன்று பெயர்கள் இந்த வழக்கில் அடிபட்டது. ஆனால், ஹேம்நாத்தின் கைதோடு இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறி போலீசார் விசாரணைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.

இந்த நிலையில், சித்ரா தற்கொலைக்கு ஹேம்நாத்துடன் சேர்ந்து நான்கு பேருக்கு தொடர்பு இருப்பதாக சித்ராவின் நெருங்கிய தோழி ரேகா நாயர் பரபரப்பை கிளப்பினார்.


ஆனால், அதில் சாட்சியங்கள் இல்லை. இந்த சூழலில் சித்ரா தற்கொலை செய்துகொண்ட அன்றுகூட இருந்த ஹேம்நாத்தும் அதே குற்றசாட்டை வைத்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சித்ராவுக்கு செக்ஸ் டார்ச்சர் இருந்ததாகவும் ஹேம்நாத் கூறியுள்ளார்.

இந்த பரபரப்புக்கு மத்தியில், சித்ராவுக்கு முக்கிய புள்ளிகளுடன் தொடர்பு இருந்ததாக ரேகா நாயர் தெரிவித்த சில விஷயங்கள், சித்ரா எந்த அளவுக்கு அவர்களிடம் நெருக்கமாக இருந்திருப்பார் என்று அதிமுக வட்டாரத்திலேயே சிலர் இண்ட் கொடுத்துள்ளனர்.

சித்ராவும், ஹேம்நாத்தும் அவசர அவசரமாக பதிவு செய்துகொண்டுள்ளனர். கணவன், மனைவியாக ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள்… ஆனால், சித்ராவின் அறையில் அதிகப்படியான ஆணுறைகள் இருந்துள்ளன.. அதை சித்ராவின் தோழியும், இம்மானுவேலும் நேரில் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து கேள்வி எழுப்பும் ரேகா நாயர், கணவன், மனைவியாக வாழும் இவர்களது அறையில் அவ்வளவு ஆணுறைகள் எதற்கு என்று கூறி பூசி மொழுகியுள்ளார். கணவன் மனைவி அறைக்குள் ஆணுறைகள் இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க போகிறது? என்று ரேகா நாயருக்கு தெரிந்திருந்தும் அந்த வார்த்தையை அடிக்கடி பதிவு செய்திருப்பதும், சித்ராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்கள் என்று ஹேம்நாத் கூறுவதற்கும் காரணம் உள்ளது என்கின்றனர்.

மேலும், இந்த சந்தேகங்களை வலுப்படுத்தும் விதமாக, அமைச்சர் ஒருவர் சின்னத்திரை விருது வழங்குவது தொடர்பாக சென்னையில் பிரபலமான லீலா பேலஸ் ஓட்டலுக்கு சித்ராவை அழைத்ததாகவும் அதில் இருந்துதான் சித்ராவுக்கு அவருடன் அறிமுகம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதில் தொடங்கிய அறிமுகம், சித்ரா தங்கியிருந்த விடுதி வரை வந்ததாக பிரபல ஊடகத்தில் செய்தி வெளியானது.

அப்படியென்றால், சித்ராவுக்கு அவர்கள் மூலம் பாலியல் தொல்லை ஏற்பட்டிருக்கலாம்…. அப்படி இல்லையென்றால், இனி இந்தமாதிரி தொடர்பு வேண்டாம் என சித்ரா அவர்களை விட்டு விலக நினைத்தபோது தொந்தரவுகளை சந்தித்திருக்கலாம் என அதிமுக வட்டாரத்தில் சொல்கின்றனர்…