
தமிழகத்தில் மனைவியுடன் 10 ஆண்டுகளாக பேசாமல் இருந்த கணவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நீலம்பூர் பகுதியில் காளியப்பன் மற்றும் அவரது மனைவி ராஜாமணி வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் வாடகை குடியிருப்பில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார்.

காளியப்பன் தனது மனைவியிடம் பத்து வருடங்களாக சண்டையிட்டு பேசாமல் இருந்து வந்திருக்கின்றார்.
இந்த நிலையில் அவரது சொந்த வீட்டில் குடியிருக்கும் பெண்களிடம் காளியப்பன் அருவருப்பாக பேசுவதுமாக இருந்து வந்துள்ளார்.

இதனை கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்த ராஜாமணி வாடகை குடியிருப்பில் உள்ள ஹரிகிருஷ்ணனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய முடிவெடுத்தார்.
இதையடுத்து காளியப்பன் நடைப்பயிற்சிக்கு சென்ற போது கிரிக்கெட் மட்டையால் ஹரி கிருஷ்ணன் தலையில் பலமாக அடித்து கொன்றுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஹரிகிருஷ்ணனையும், காளியப்பனை கொல்ல உடந்தையாக செயல்பட்ட ராஜாமணியையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.















