மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டம் மிராரோடு பகுதியில் பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த ஓட்டலில் 13 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்த உள்ளதாக ஆள் கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் போலி வாடிக்கையாளரை அனுப்பி விசாரணை நடத்தினர்.
இதில் பெண் ஒருவர் தனது 13 வயது மகளை ரூ.2 லட்சத்திற்கு பேரம் பேசி விபச்சாரத்தில் ஈடுபடுத்த இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்குள்ள ஓட்டலில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெண் தரகர் ஒருவர் சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சி செய்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து பெண் தரகர் மற்றும் இதற்கு உடந்தையாக செயல்பட்ட சிறுமியின் தாய் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
மேலும், போலீசார் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.