18 அடி நீளம் கொண்ட ராஜநாகம்… அசால்ட்டாக பிடித்த பெண் வனத்துறை ஊழியர்!!!

922

திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் அருகில் உள்ள ஓடைப்பகுதியில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பருத்திப்பள்ளி ரேஞ்சின் வனப் பிரிவு பெண் அதிகாரி ரோஷ்னி அசால்டாக பிடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பீட் ஃபாரஸ்ட் அதிகாரி ஜி.எஸ். ரோஷ்னி, பெப்பரா அருகே உள்ள ஒரு ஓடையில் இருந்து 14-15 அடி நீளமுள்ள ஒரு பெரிய ராஜ நாகப்பாம்பை தனியாகப் பிடிப்பதை படம் பிடித்துக் காட்டுகிறது.

பருத்திப்பள்ளி ரேஞ்சின் விரைவு மீட்புக் குழுவைச் சேர்ந்த ரோஷ்னி, ஒரு நீண்ட குச்சி மற்றும் பையைப் பயன்படுத்தி 6 நிமிடங்களில் இந்த முதிர்ந்த ராஜநாகத்தை அசால்ட்டாக பிடித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நேற்று ஜூலை 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு மீட்புப் பணிகள் நடைபெற்றன. பின்னர், அந்த ராஜ நாகப்பாம்பு பாதுகாப்பாக அடர்ந்த காட்டில் விடப்பட்டது. அந்த பெண் வன ஊழியரின் துணிச்சலான செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்றது.

திருவனந்தபுரம் பகுதியில் இது மாத்ரியான மிகப்பெரிய பெரிய ராஜநாகம் சிக்கியிருப்பது இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது. ஏனெனில் இப்பகுதியில் ராஜநாகங்கள் அரிதாகவே காணப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.