2 மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை.. உடந்தையாக இருந்த தாய்!!

1010

ஆந்திரா….

ஆந்திரப் பிரதேசத்தின் எலுருவில் நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு பெண் ஒருவர் தனது முதல் கணவர் இறந்த பிறகு வேறொருவரை 2ம் திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றும், பெண்ணின் குடும்பம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. தன்னுடைய மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த 2 குழந்தைகள் மீது அத்துமீறியுள்ளார் தாயின் 2வது கணவர்.

முதல் பெண்ணுக்கு 17 வயது என்றும், இளைய மகளுக்கு 16 வயது ஆகிறது. தனது 17 வயது வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கி உள்ளான் அந்த காம வெறியன். மேலும், 2வது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.


இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்க சம்பந்தப்பட்ட பெண்ணையும், அவரின் கணவரையும் போலீஸ் கைது செய்தனர்.

சிறுமி அளித்த புகாரின் பேரில், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.