25 தோசை சாப்பிடுவதாக கூறி கோபிநாத்தை ஏங்க வைத்த இளைஞர் திடீரென மரணம்!!

61

நீயா நானா நிகழ்ச்சியில் 25 தோசை சாப்பிடுவதாக கூறி பிரபலமான இளைஞர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.

இந்நிலையில் கடந்த மாதம் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் கவனம் பெற்றிருந்தார். அந்த வாரத்தில் தோசை கொண்டாடப்பட வேண்டிய உணவு மற்றும் தோசை சாதாரண உணவு என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

அதில் நபர் ஒருவர் 22 தோசை சாப்பிடுவாராம். குறித்த இளைஞரின் தங்கை அரங்கத்தில் புலம்பினார். இந்நிகழ்ச்சி வைரலானதை அடுத்து, பிரணவ்வையும அவரது தாயாரையும் சில யூடியூப் ஊடகங்கள் பேட்டி எடுத்தது.

இது குறித்து அவர் கொடுத்திருந்த நேர்காணலில், உண்மையாகவே 25 தோசையை தேன், பொடி, மேகி மசாலா ஆகியவற்றை போட்டு சாப்பிட்டு காண்பித்தார். இவ்வாறு மக்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டாகிய பிரணவ் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.


குரோம்பேட் ரயில் நிலையத்தில் இரவு 10.30 மணிளவில் நண்பருடன் சேர்ந்து தண்டவாளத்தை கடக்க முயற்சித்த போது வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.

இதில் அவரது நண்பர் சதீஷ் என்பவரும் உயிரிந்துள்ளார். நீயா நானா நிகழ்ச்சி மூலம் நடுவர்கள் முதல் பார்வையாளர்கள் வரை அனைவரையும் வாயடைக்க வைத்தவர் விபத்தில் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.