3 மாதங்களாக 16 வயது சிறுவனுடன் உல்லாசம் அனுபவித்த 27 வயது இளம்பெண் : இறுதியில் நடந்த சோகம்!!

2697

சிவகங்கை….

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். இவரது பக்கத்து வீட்டில் 27 வயது இளம்பெண் தன்னுடைய 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இவருடைய கணவர் ஓட்டுநராக இருப்பதால் அடிக்கடி வெளியூறுக்கு சென்று விடுவார். மாணவனும், இளம்பெண்ணும் உறவினர் என்பதால் அடிக்கடி இருவரும் மாறி மாறி வீட்டுக்கு சென்று வந்தனர்.

இந்நிலையில் அந்த மாணவருக்கும், இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக மாணவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டு சோர்வாக காணப்பட்டார். இதனால் சந்தேகமடைந்த அவருடைய பெற்றோர் அதுகுறித்து மாணவரிடம் கேட்டுள்ளனர்.


அப்போது மாணவர் தயங்கியபடி 3 மாதங்களாக மிரட்டி பாலியல் உறவு கொள்வதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மானாமதுரை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ் 1 மாணவரை மிரட்டி உல்லாசம் அனுபவித்த இளம்பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.