மேற்கு வங்கத்தில்…….

மேற்கு வங்கத்தின், பர்கானாஸ் மாவட்டம், பராக்பூர் பகுதியைச் சேர்ந்த ஜெய்தேவ் – சதி தம்பதிக்கு இன்ஸ்டாக்ராமில் ரீல்ஸ் பதிவேற்றம் செய்யும் மோகம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில், புதியதாக ஒரு ஆப்பிள் போன் வாங்க ஆசை பட்டுள்ளனர்.

அவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 8 மாதத்தில் ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தரமான ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவதற்காக ஐபோன் வாங்க முடிவு செய்து தங்களது 8 மாத ஆண் குழந்தையை 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்று புது ஐபோனை வாங்கி உள்ளனர்.

இதையறிந்த அக்கப்பக்கத்தினர் அளித்த தகலின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை விற்றது அம்பலமானது.

இதனால் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், குழந்தையை மீட்டு மற்றும் குற்றவாளி பெற்றோரை கைது செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.















