15 வயது சிறுமி 7 மாத கர்ப்பம்.. நடந்த பதறவைக்கும் சம்பவம் : நிலைகுலைந்த பெற்றோர்!!

696

திருப்பூர்…

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரின் மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று அங்கே தங்கி வந்திருக்கிறார்.

அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் வசந்தகுமார் அந்த சிறுமியிடம் அதிகம் பேசி பழகி வந்திருக்கிறார். காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் சிறுமியிடம் சொல்லி வந்திருக்கிறார்.

ஒருநாள் பாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதன் பின்னர் அந்த செய்தியை அடிக்கடி அழைத்து தனிமையில் உல்லாசமாக இருந்திருக்கிறார்.


கடந்த 12ஆம் தேதி அன்று அவரை அழைத்துச் சென்று மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து உள்ளார் அந்த வாலிபர். இந்த நிலையில் தான் நேற்று வீட்டில் இருந்த சிறுமிக்கு உடல்நிலை பாதிப்படைந்து இருக்கிறது .

இதனால் பெற்றோர் சிறுமியை உடுமலை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளார்கள் . அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளார்கள். போலீசார் விசாரணையில் தனக்கு நடந்தவற்றை சிறுமி போலீசில் சொல்ல,

திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்து சிறிது கர்ப்பமாக்கிய வசந்தகுமார் மீது போக்சோ- குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.