இந்தியா…..

இந்தியாவில் கொரோனா வைரஸை தடுக்க கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு, தற்போதுதான் சிறிய தளர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தபாடில்லை.

இதையடுத்து, சமீப நாட்களாக திரைப்பிரலங்கள் மரணம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்,

விக்கி டோனர் போன்ற படங்களில் நடித்த நாடகக் கலைஞரும், நடிகருமான பூபேஷ் குமார் பாண்டியா தற்போது நுரையீரல் புற்றுநோயால் மரணமடைந்துள்ளார்.

மேலும், இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். எனவே அவரது குடும்பத்திற்கு உதவி செய்யும்படி அவருடைய நண்பர்கள் மற்றும் நடிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.















