பிக்பாஸ் சர்ச்சை நடிகை மீரா மிதுன் கைது?.. வெளியான பரபரப்பு தகவல்!!

630

நடிகை மீரா மிதுன்…..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் சமீப நாட்களாக சமூக வலைதளங்களில், பல சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு வந்தார்.

நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்ட உச்சநட்சத்திரங்கள் மீதும் தேவையற்ற விமர்சனங்களை மீரா மிதுன் முன்வைத்தார். இதனால் ரசிகர்கள் பலர் மீரா மிதுனை கடுமையாக சாடி வந்தனர். இந்நிலையில், மீரா மிதுனின் பழைய ட்வீட் ஒன்றை ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

அதில், கேரளாவைச் சேர்ந்த அஜித் ரவி என்பவர் கடந்த சில வருடங்களாக என்னை பல்வேறு கடந்த டார்ச்சர் செய்து வருகிறார் ஆனால் இன்னமும் அவர் கைது செய்யப்படவில்லை ஏன் மலையாளிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.


நான் முதலமைச்சராக இருந்திருந்தால், தமிழர்கள் மட்டும் தான் தமிழ்நாட்டில் தாங்க அனுமதிப்பேன். மலையாளி, தெலுங்கு மற்றும் மற்றவர்களை வெளியில் அனுப்பி விடுவேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், வீடியோவில் மலையாளிகளை தவறான வார்த்தையில் திட்டியுள்ளார். இதனால் கேரளா அரசு FIR பதிவு செய்துள்ளது. இதனால் இவர் விரைவில் கைது செய்யப்படுவதாகவும், ஜாமீனுக்கும் வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.