“என்னை ஏமாத்திட்டா”… இரவில் காதலியின் வீட்டிற்கு சென்று இளைஞன் செய்த கொடூரம்!!

1128

ஷாஜாபூர்..

மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள பெர்ச்சா என்ற இடத்தில் நேற்று இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சிறுமி ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இந்த செயலை செய்தவர் உயிரிழந்த நபரின் பெண்ணின் காதலன் சுபாஷ் என்பது தெரியவந்தது. சுபாஷ் வீட்டின் முதல் மாடிக்கு நள்ளிரவு ஏணி மூலம் நுழைந்து, வீட்டில் இருந்த சிறுமி ஷிவானி, சகோதரர் ராஜ் மற்றும் அவரது தந்தையை நோக்கி துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது.


இதில் சிறுமியின் தந்தை ஜாகீர்கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேசமயம், பாதிக்கப்பட்ட சிறுமி ஷிவானி பலத்த காயம் அடைந்து இந்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் அப்பெண்ணின் காதலன் சுபாஷ் அவரின் மூகநூல் பக்கத்தில் காதலியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து என்னை காதலித்து இவள் ஏமாற்றிவிட்டாள்.

தற்போது அவளால் மறக்க முடியாத ஒரு வலியை அவளுக்குக் கொடுத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். மறுபுறம், காலையில் ரயில் தண்டவாளத்தில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது, இது குற்றம் சாட்டப்பட்ட சுபாஷுடையது என்று கூறப்படுகிறது.

இருப்பினும் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. காதலியின் குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் சுபாஷ் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள காவல் துறையில் பணியமர்த்தப்பட்டவர் என்று கூறப்படுகிறது. அவருடைய தந்தையும் ஒரு போலீஸ்காரர். குற்றம் சாட்டப்பட்டவருக்கு அரசுப் பணியின் போது தந்தை இறந்ததால் கருணை நியமனம் கிடைத்ததும் தெரிய வந்துள்ளது.