இரண்டு வயது குழந்தையை தவிக்கவிட்டு பிரபல நடிகர் தற்கொலை!!

816

நடிகர் தென்னரசு……

குடும்பத்தகராறு காரணமாக பிரபல தமிழ் திரைப்பட நடிகர், சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் பவித்ரா. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் நடிகர் தென்னரசுடன் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நடிகர் தென்னரசு அடிக்கடி குடிபோதையில் மனைவியிடம், தகராறு செய்து வந்துள்ளதாக தெரிகிறது.


அப்படி கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, நடிகர் தென்னரசு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.