
புதுச்சேரியில் முன்விரோதம் காரணமாக வாலிபரை சரமாரியாக அரிவாள் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி அடுத்த ஆரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவா(45). மர பொருட்கள் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகவேல் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் வில்லியனூர் பகுதியில் சென்று கொண்டு இருந்த தேவாவை, முருகவேல் வழிமறித்து மறைத்து வைத்திருந்த அரிவாளல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார்.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் படுகடையமடைத்து உயிருக்கு போராடிய தேவாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையை தேவாவை வெட்டி விட்தப்பியோடிய முருகவேலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















