சிறுவர்களுக்கு திருமணம் செய்து நூதன வழிபாடு… வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

617

கர்நாடகா..

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜபேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர்கள் குழந்தை திருமணம் நடத்தினால் மழை பெய்யும். இதன்படி, சிறுவர்கள் 2 பேரை பாரம்பரிய ஆடை அணிவித்து அவர்கள் இருவரையும் மணமக்களாக மாற்றி திருமண நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளனர்.

அதனுடன், மழை வரவேண்டும் என கிராமவாசிகள் மழை கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டனர். இதன் பின்னர், சிறப்பு விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. கிராமவாசிகளும் அதில் கலந்து கொண்டனர். இது குறித்து உள்ளூர்வாசிகள் “கடந்த ஆண்டை ஒப்பிடும்பொழுது, கர்நாடகாவில் பருவமழை பலவீனம் அடைந்து உள்ளது.

நடப்பாண்டில் மழை பற்றாக்குறையாக உள்ளது. இந்த நடைமுறை நமது பாரம்பரியம் தான். காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பழைய பாரம்பரிய நடைமுறைகளை கொண்டாடுவது என மக்கள் முடிவு செய்வதில் தவறு ஒன்றும் இல்லை” என கூறுகின்றனர்.


2 சிறுவர்களில் ஒருவரை சூர்யதேவன் வேடத்திலும், மற்றொருவரை சந்திரமதியாகவும் வேடமிட்டு அலங்காரம் செய்தனர். பின்னர் இருவரும் வீடு வீடாக சென்று மைதா மாவை வாங்கி வந்தனர்.

அதன்பிறகு அந்த மாவை கொண்டு அப்பம், ரொட்டி தயாரித்தனர். திறந்தவெளியில் சிறுவர்களுக்கு திருமணம் நடத்தி நூதன வழிபாடு நடத்தப்பட்டது.

கிராம மக்கள் மழை வேண்டி ஆடிப்பாடி அப்பம், ரொட்டியை மக்கள் போட்டி போட்டு எடுத்து சாப்பிட்டனர். இதனால் வருண பகவான் மனமிரங்கி மழை பொழிய வைப்பார் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.