மீண்டும் ம.பி.யில் ஒரு கொடூரம்.. இஸ்லாமியரை தாக்கி காலை நக்கவைத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி!!

299

மத்திய பிரதேசத்தில்..

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதலமைச்சராக சிவராஜ் சிங்க சவுகான் உள்ளார். இந்த மாநிலத்தில் பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர், இஸ்லாமியர்கள், பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் பாஜக நிருவாகி ஒருவர் பழங்குடி சமூக இளைஞர் மீது சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகி இந்தியாவையே உலுக்கியது. இந்த விவாகரத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், வேறு வழியின்றி பாஜக நிர்வாகி மீது ம.பி அரசு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் இரு நாட்களுக்கு முன்னர், அதே மத்திய பிரதேசத்தில் பட்டியல் சமூக இளைஞர்கள் இருவரை தாக்கி மலத்தை திங்கவைத்த கொடுமை நடந்துள்ளது. இந்த நிலையில், தற்போது இஸ்லாமியர் ஒருவரை தாக்கி அவரை காலை நக்கவைத்த கொடுமையான நிகழ்வு நடைபெற்றுள்ளது.


மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் மொஹ்சின் கான் . இவர் கடந்த சில நாட்களாக காணாமல் போயுள்ளார். இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட தேடுதல் வேட்டை நடைபெற்றுவந்தது. இதனிடையே மொஹ்சின் கான் தாக்கப்படும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளியான வீடியோவில், மொஹ்சின் கானை சிலர் சாலையில் ஓடும் காரில் கடந்தி செல்வதும், அவர் கொடூரமாக தாக்கப்படுவதுமான காட்சிகள் வெளியாகியுள்ளது, மேலும், அதில் ஒருவர் மொஹ்சின் கானை தனது காலை நக்க சொல்லும் காட்சியும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலிஸார் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.