மச்சான் உங்க தங்கச்சிய கொலை பண்ணிட்டேன்.. மனைவியை கொலை செய்துவிட்டு கூலாக போன் போட்டு சொன்ன கணவன்!!

904

ராஜஸ்தானில்..

ராஜஸ்தான் மாநிலத்தில்தான் இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மாவட்டம் மாதா கா தான் என்ற பகுதியை சேர்ந்த 35 வயது நபர் ரமேஷ் பெனிவால்.

இவருக்கும் சுமன் என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இரண்டு பிள்ளைகளும் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

ரமேஷ் பெனிவால் மர வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை இரவு கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவியை கல்லால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார் ரமேஷ் பெனிவால்.

பின்னர் இரவு முழுவதும் தனது மனைவியின் சடலத்தின் அருகில் அமர்ந்திருந்த ரமேஷ் பெனிவால் அதிகாலை 2 மணி அளவில் தனது மனைவியை தான் கொலை செய்துவிட்டதாக தனது மைத்துனருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உறவினர்களுடன் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் ரமேஷ் பெனிவால் கதவை திறக்க மறுத்து விட்டார். தகவல் அறிந்து அங்கு வந்த வீட்டின் உரிமையாளர், போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரமேஷை எச்சரித்ததை தொடர்ந்து அவர் கதவை திறந்துள்ளார்.

கொலையை உறுதி செய்த போலீசார் ரமேஷை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ரமேஷ் பெனிவால் இரவு வீட்டிற்கு தாமதமாக வந்ததால், அவரது மனைவி சுமன் சாப்பாடு போட மறுத்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகாராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு தகராறு முற்றிய நிலையில் மனைவியை கல்லை போட்டு கொலை செய்துள்ளார் ரமேஷ் பெனிவால். கொலை செய்யப்பட்ட சுமன் ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சியின் ( ஆர்எல்பி ) மகிளா மோர்ச்சாவின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.