ரயிலில்..

ஓடும் ரயிலில் சாகசம் என்ற பெயரில் இளைஞர் செயத மோசமான சம்பவம் அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக பேருந்து, ரயில்களில் பயணம் செய்யும் இளைஞர்கள் படியில் தொங்கிக் கொண்டே பயணம் செய்கின்றனர். மற்றவர்கள் தன்னை பார்க்கும் போது அவர்கள் காட்ட நினைக்கும் பந்தா இறுதியில் உயிரை பறிக்கும் நிலைக்கே சென்றுவிடுகின்றது.

இதுபோன்ற அதிகமாக விபத்து காட்சியினை அவதானித்து வருகின்றோம். இங்கும் நபர் ஒருவர் வேகமாக சென்று கொண்டிருந்த ரயிலில் வாசல் படியில் சாகசம் செய்து பயணித்த நிலையில்,

பக்கவாட்டில் இருந்த மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்து நிலை குலைந்துள்ளார். இக்காட்சி படியில் பயணம் செய்து தோரணையை வெளிப்படுத்தும் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக காணப்படுகின்றது.
— 1 Second Before Failure (@ExtremeFaiIs) July 22, 2023















