கணவரை கழட்டி விட்டு 17 வயது சிறுவனை கரெக்ட் செய்து ஓட்டம் பிடித்த திருமணமான பெண் : இறுதியில் நேர்ந்த சோகம்!!

14451

சேலத்தில்..

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன். அப்பகுதியில் உள்ள வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்துள்ளார். வழக்கம் போல கடந்த 14ம் தேதி வேலைக்கு சென்ற சிறுவன் மீண்டும் திரும்பவில்லை.

இதனால், பதற்றம் அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சிறுவனுடைய செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனையடுத்து, பதறியடித்துக்கொண்டு அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசார் விசாரணையில் சிறுவன் வேலை செய்து வந்த அதே வெள்ளிப்பட்டறையில் வேலை செய்த 21 வயதான இளம்பெண்ணும் அதே நாளில் மாயமாகி இருப்பது தெரியவந்தது.


மேலும் அந்த பெண்ணின் கணவரும் தனது மனைவியை காணாமல் தேடி வந்துள்ளார். போலீசார் விசாரணையில் சிறுவன் வேலை செய்து வந்த வெள்ளிப்பட்டறையில் வேலை செய்த 21 வயதான இளம்பெண்ணும் அதே நாளில் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. அந்த பெண்ணின் கணவரும் தனது மனைவியை காணவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.

இறுதியில் இருவரும் எஸ்கேப்பானது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான இளம்பெண் 17 வயது சிறுவனை ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.