கள்ளக் காதலியுடன் கணவன் உல்லாசம்.. நேரில் பார்த்த மனைவி.. அடுத்து நடந்த பயங்கரம்!!

38707

ஆந்திர மாநிலத்தில்..

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹுசைன். 30 வயதான இவருக்கு நஸியா என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்திற்குப் பிறகு ஹஸ்னாபாத்தைச் சேர்ந்த ஷோபனா என்பவருடன் ஹுசைனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஷோபனா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.

ஹுசைனுக்கும் ஷோபனாவிற்கும் இடையிலான பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. ஹுசைனின் கள்ளக் காதல் விவகாரம் ஒரு கட்டத்தில் நஸியாவுக்கு தெரியவர அவரை கண்டித்துள்ளார்.

ஆனாலும், ஷோபனாவுடனான தொடர்பை ஹுசைன் கைவிடவில்லை. மனைவிக்கு தெரிந்துவிட்டதால் சுதந்திரமாகவே கள்ளக்காதலி வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தார்.


இந்த நிலையில் ஹோபனாவின் வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு ஹுசைன் சென்றுள்ளார். இதுகுறித்து நஸியாவுக்கு தகவல் தெரியவர தனது அம்மாவுடன் நேரடியாக ஷோபனாவின் வீட்டிற்கே சென்றுவிட்டார்.

அங்கு ஹுசைனும் ஷோபனாவும் தனிமையில் இருப்பதைப் பார்த்து ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார். இருவரின் கைகளையும் ஒன்றாக சேர்த்து கயிறால் கட்டிய நஸியா குடும்பத்தினர், தலையில் பாதி மொட்டை அடித்துவிட்டனர்.

மேலும் கயிறால் கட்டி இருவரையும் கிராமத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது, ஷோபனா மீது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. மேலும், ஆட்டோ ரிக்‌ஷாவில் கட்டிப்போட்டு செருப்பு மாலை அணிவித்து ஹுசைனின் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு ஹுசைன் தலை பாதி மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் இருப்பதை பார்த்த உள்ளூர்வாசிகள், நசியாவையும் அவரது குடும்பத்தினரையும் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அந்த சமயத்தில் ஹுசைன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ஹுசைன் மற்றும் ஷோபானா இருவரும் கயிறால் கட்டப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நஸியா மற்றும் அவர் குடும்பத்தினரின் மீது 506, 355, 323 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.