வவுனியா கோவில்களில் இடம்பெற்ற வித்தியாரம்பம் நிகழ்வு!!

745

நவராத்திரி விரதத்தின் இறுதி நாளான விஜய தசமி தினத்தில் வவுனியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் வித்தியாரம்பம் சிறப்பாக இடம்பெற்றது.

குறிப்பாக ஆலங்களில் இன்று (25.10.2020) காலை தொடக்கம் மதியம் வரையிலான காலப்பகுதியில் பெருந்தளவிலான மக்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு வித்தியாரம்பம் (ஏடு தொடங்குதல்) செய்வதற்காக வருகை தந்திருந்தனர்.

அந்த வகையில் வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திலும் வித்தியாரம்பம் (ஏடு தொடங்குதல்) சிறப்பாக இடம்பெற்றிருந்தது.