என் அப்பாவ விட்டுடுங்க. மகள் கண் எதிரிலேயே கணவனை அடித்தே கொன்ற மனைவியின் கள்ளக்காதலன்!!

355

மகள் கண் எதிரிலேயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் கன்னா மாவட்டம் சோஹியான் கிராமத்தில் நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் சௌரப் கொலை வழக்கை நினைவூட்டுகிறது.

பகதூர் சிங் (40) என்ற நபரை அவரது மனைவி ஜஸ்வீர் கவுர் மற்றும் அவரது கள்ளக்காதலன் சுக்ப்ரீத் சிங் ஆகிய இருவரும் சேர்ந்து, இரும்புக் கம்பியால் தலையில் தாக்கி படுகொலை செய்துள்ளனர்.

இது குறித்து வெளியான தகவலின் படி பகதூர் சிங் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருடன் சுக்ப்ரீத் சிங் என்பவரும் வேலை பார்த்துள்ளார்.

பகதூரின் மனைவி ஜஸ்வீர் கவுருக்கு சுக்ப்ரீத் சிங்குடன் பழக்கம் ஏற்படவே நாளடைவில் இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் கணவருக்கு தெரிய வரவே தங்களுடைய 7 வயது மகளின் எதிர்காலத்தைக் கருதி கள்ளத்தொடர்பை கைவிடும்படி பலமுறை இருவரிடமும் கூறியுள்ளார்.


நல்ல வழியில் யோசிக்காமல் தங்களது கள்ளக்காதலைக் கைவிட சொன்ன கணவனை, மனைவி தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொல்ல திட்டமிட்டுள்ளார்.

அதன்படி இரவு கணவன் தூங்கிக் கொண்டிருந்த போது கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து இரும்புக் கம்பியால் இருவரும் சேர்ந்து அவரை கொடூரமாக அடித்து கொலை செய்தனர்.

என் அப்பாவை விட்டு விடுங்கள் என அவர்களின் மகள் கதறி அழுத நிலையில், இருவரும் இரக்கமே இல்லாமல் அவரை அடித்து கொலை செய்துள்ளனர்.

அதன் பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் உடனடியாக பகதூரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.