அடுத்தடுத்து கொலை மிரட்டல்.. பயத்தில் கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்த கணவன்!!

425

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நிகாசன் கோட்வாலி பகுதியில் உள்ள சக்ரா கிராமத்தில் வசித்து வருபவர் குர்னம் சிங். இவர் விவசாயியாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் ராஜ்விந்தர் என்ற பெண்ணை 18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

ஆனால் சமீபத்தில், ராஜ்விந்தர் தனது கணவனின் மாமாவின் மகன் சத்னம் சிங்குடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. சத்னமும் ஏற்கனவே திருமணமாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் குறித்து அறிந்த குர்னம் சண்டையிட்ட நிலையில், ராஜ்விந்தர் மற்றும் சத்னம் இணைந்து அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ராஜ்விந்தர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த பின்னர் ராஜ்விந்தர் குர்னமுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பயந்த குர்னம், மே 26 ம் தேதி கிராமத்தில் ஒரு பஞ்சாயத்தை கூட்டி, தனது மனைவியை அவளுடைய காதலனாக கூறப்படும் சத்னத்திற்கு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து வைத்துவிட்டார்.


திருமணத்திற்கு பின் ராஜ்விந்தர் தனது கணவரிடம் ஏற்பட்ட மனவேதனைகளை சொல்லியுள்ளார். “திருமணம் ஆனதிலிருந்து குர்னம் என்னை அடிப்பார். தினமும் சரிவர சாப்பாடு கூட போடமாட்டார்.

ஆனால் சத்னம் என்னை ஆதரித்தார்,” என பஞ்சாயத்தில் கூறியுள்ளார். ஆனால் திருமணத்திற்கு பின் சத்னம், “ என் மனைவி என்னை விட்டுச் சென்றுவிட்டாள்,

இப்போது நான் அவதூறுக்கு உள்ளாகிறேன்,” எனக் கூறி ராஜ்விந்தருடன் வாழ மறுத்துவிட்டார். சத்னம் தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளின் அழுத்தத்தால், ராஜ்விந்தரிடமிருந்து பிரிவதாக அறிவித்துள்ளார். “அவளை தாய்வீட்டுக்கு அனுப்பிவைக்கிறேன்.

என் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துத் தான் பிரிந்து வாழ விரும்புகிறேன்,” எனக் கூறியுள்ளார். இச்சம்பவம், சமூகத்தில் பெரும் விவாதத்துக்கும் அதிர்ச்சிக்கும் காரணமாகியுள்ளது. மேலும் இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.