கரும்புத் தோட்டத்தில் இளம் மனைவிக்கு நடந்த கொடூரம் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!

1358

திருவண்ணாமலை..

திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த களஸ்தாம் பாடி கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவரது மனைவி கெளதமி, இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

மதுவிற்கு அடிமையான ராஜா, கடந்த சில மாதங்களாகவே ஆட்டோ ஓட்டுவதற்காக செல்வது இல்லை என தெரிகிறது. மேலும் வீட்டில் இருக்கும் மனைவியை அடித்து துன்புறுத்தி பணம் கேட்டும் கொடுமைப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதனால் மன உளைச்சலடைந்த ராஜாவின் மனைவி வீட்டை விட்டு வெளியில் சென்று திரும்பி வரவேயில்லை என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ராஜாவின் தாயாரான பச்சையம்மாள் வேலை விஷயமாக விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.


அப்போது அங்கே இருந்த கரும்பு தோட்டத்தில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் இறந்த பெண் தேடப்பட்டு வந்த தனது மருமகள் கெளதமி என்பதும் தெரியவந்தது.

இது குறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், இறந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது மாமியானரான, பச்சையம்மாளிடமும் விசாரணை மேற்க்கொண்டனர். அதில் மது குடிப்பதற்காக மனைவி பணம் தராததாலும், நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாகவும் தெரியவந்தது.

இதனால் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த கணவர் ராஜா, அவர் விவசாய நிலத்திற்கு செல்லும்போது பின் தொடர்ந்து சென்று மனைவியை தாக்கியுள்ளார். வலியால் துடித்த அவர்,

அங்கேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. தான் தாக்கியதால் தான் மனைவி இறந்து விட்டாரோ என நினைத்த கணவர் ராஜா, அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ததாகவும் விசாரணையில் ஓப்புக்கொண்டார்.

அதனைதொடர்ந்து ராஜைவை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.