திருணமான மூன்றே மாதத்தில் மனைவியை அடித்தே கொன்ற கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

1888

கள்ளக்குறிச்சி….

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜிக்கும், மேனகாவுக்கும் மூன்று மாதங்களுக்கு முன், காதல் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இன்று விஜயராஜ்.

தனது காதல் மனைவி மேனாகா மீது சந்தேகப்பட்டு, தொலைபேசியில் யாரிடம் அதிக நேரம் பேசுகிறாய் என்று கூறி, வீட்டில் இருந்த பிளாஸ்டிக் பைப்பால் அடித்துள்ளார். இதில், மேனகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த மணலூர்பேட்டை காவல் நிலையப் போலீசார் விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விஜயராஜியை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


விஜயராஜிக்கு ஏற்கனவே 2 மனைவி உள்ளனர். இவருடைய தொல்லை தாங்க முடியாமல், அவர்கள் இருவரும் பிரிந்து சென்று விட்டனர். இந்நிலையில், மேனகாவை மூன்றாவதாக திருமணம் செய்தார் விஜயராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயராஜிக்கு ஏற்கனவே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக முதல் மனைவி திருமணம் நடைபெற்றது அவர் வேறு உடைய நபருடன் ஓடிவிட்டார். அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தார் அந்தப் பெண்ணை அடிக்கடி குடிபோதையில் பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அந்தப் பெண் இவருடைய வாழாமல் பிரிந்து சென்றார் அதன் பிறகு மூன்றாவது மனைவி மேகனா என்ற பெண் மூன்று மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார் மேகனா மீது அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டு தொலைபேசியில் நீ யாரிடம் பேசுகிறாய் என்று கேட்டவு அந்தப் பெண்ணிடம் அடிக்கடி தகராறு ஈடுபட்டிருந்தார். அதன் பிறகு குடிபோதையில் அந்தப் பெண்ணை அடித்து கொலை செய்தார் மனைவி உள்ளனர்.