நள்ளிரவில் ஆட்டுக் கொட்டகையில் புகுந்த கள்ளக்காதல் ஜோடி : அடுத்து நேர்ந்த விபரீதம்!!

58385

நாமக்கல்..

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வீரப்பம்பாளையம் மற்றும் நல்லாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆடுகள் திருடப்படுவதாக புகார் எழுந்தது. இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் போலீசில் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு அப்பகுதியில் வசிக்கும் வெங்கட் ராஜ் என்பவர் வீட்டில் இரண்டு ஆட்டு குட்டிகள் காணாமல் போயுள்ளன.

அப்போது, அப்பகுதி மக்கள் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய நேரத்தில் தங்கள் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒரு டாட்டா ஏசி வாகனம் செல்வதை கண்டு அதனை மடக்கி பிடித்து விசாரித்தனர்.


அந்த வாகனத்தில் வெங்கட்ராஜ் வீட்டில் திருட்டு போன இரண்டு ஆட்டுக்குட்டிகள் இருந்துள்ளன. இதனையடுத்து கிராம மக்கள் டாட்டா ஏசி வாகனத்துடன் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அந்த வாகனத்தில் இருந்த மோகன் என்பவரும் மேகலா என்பவரும் போலீசில் தாங்கள் ஆடு திருடியதை ஒப்புக்கொண்டனர்.

மேலும், அவர்கள் கள்ளக்காதல் ஜோடி என்பதையும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து டாட்டா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் அவர்களை கைது செய்து குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.