இன்ஸ்டாகிராமில் மூழ்கிய 8ஆம் வகுப்பு மாணவி தோழியுடன் எடுத்த முடிவு!!

590

கோயம்புத்தூர்…

ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டிருந்தன. இதனால் செல்போன் பயன்படுத்துவதன் தேவை அதிகமானது.

அதில் இருந்து கூகுல் மீட், ஜூம் மீட் செயலிகளும், வாட்ஸப்பும் பேருதவி செய்திருந்தன. இந்த நிலையில் ஆன்லைன் வகுப்பு நேரத்தை கடந்து பெரும்பாலான மாணவ, மாணவியர் சமூக வலைதள பக்கங்களையும், பொழுதுபோக்கு செயலிகளையும் நாடினர். குறிப்பாக இன்ஸ்டாகிராம். ஆன்லைன் வகுப்புக்காக செல்போனை பயன்படுத்திய பலர் இன்ஸ்டாகிராமில் மூழ்கிவிட்டனர்.

அவ்வாறு மூழ்கிய கோயம்புத்தூர் சிறுமி ஒருவர் ஆன்லைன் வகுப்புகள் இல்லாத இந்த காலகட்டத்திலும் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். எட்டாம் வகுப்பு படிக்கும் அவர் இன்ஸ்டாகிராமில் மூழ்கினார். இதை அவரின் தந்தை பலமுறை கண்டித்தும் சிறுமி கேட்கவில்லை.


படிப்பதற்க்கு நோட் புத்தகம் விரித்து வைத்துவிட்டு தொடர்ந்து இன்ஸ்டாகிராமை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமியின் தந்தை செல்போனை பிடுங்கி இன்ஸ்டாகிராம், பேஸ்புக் செயலியை டெலிட் செய்துள்ளார்.

தந்தையின் கண்டிப்பை பொறுத்துக்கொள்ள முடியாத சிறுமி யாரிடமும் சொல்லாமல் தனது வகுப்பு தோழியுடன் ரயில் ஏறி அவரின் பெரியம்மா வீட்டிற்கு செல்ல சென்னை புறப்பட்டுள்ளார்.

இது குறித்து கோவை மாநகர மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் விசாரணையில் இரண்டு சிறுமிகளும் சென்னைக்கு ரயில் ஏறியது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் கோவை போலீசார் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் உதவியை நாடியிருக்கின்றனர். அதனை தொடர்ந்து சிறுமிகள் இருவர் ரயில் நிலையத்தில் இறங்கியதும் பிடிபட்டிருக்கின்றனர். அவர்களை கோவைக்கு அழைத்துவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இன்ஸ்டாகிராமில் மூழ்கிய 8ஆம்
வகுப்பு படிக்கும் சிறுமியை தந்தை கண்டித்ததால் அந்த சிறுமி கோபித்துக்கொண்டு ரயில் ஏறி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.