கிரிக்கெட் விளையாடிய சிறுவனுக்கு மைதானத்திலேயே நேர்ந்த சோகம்!!

6172

உத்தரப்பிரதேசம்..

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் அனுஜ் பாண்டே என்ற 16 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார். இச்சம்பவம் புதன்கிழமை காலை நடந்துள்ளது.

கீழே விழுந்த அனுஜ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

ஆனால் பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் சம்மதிக்கவில்லை. இத்துடன் அனுஜின் இறுதிச் சடங்குகள் முடிந்தன.


கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது அனுஜ் ஓட முயன்றபோது அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு நெஞ்சில் வலி ஏற்பட்டதாகவும், அதன் பிறகு அவர் தரையில் விழுந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.